2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கோப் குழுவின் அறிக்கை இன்று கையளிப்பு

Super User   / 2013 ஜூலை 23 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

310 பக்கங்களைக் கொண்ட இறுதி அறிக்கையொன்றினை கோப் என அழைக்கப்படும் பொது நிறுவனங்கள் பற்றி ஆராயும் நாடாளுமன்ற குழு  இன்று செவ்வாய்க்கிழமை கையளிக்கவுள்ளது.

இந்த குழுவின் அறிக்கை சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடமே கையளிக்கப்படவுள்ளது என இந்த குழுவின் தலைவரான சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்தார்.

247 அரச நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னரே 20 முன்மொழிவுகள் இந்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார். இந்த குழுவில் 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .