2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

தயாசிறியின் வெற்றிடத்திற்கு நளின்

Kanagaraj   / 2013 ஜூலை 24 , மு.ப. 11:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக்கட்சியின் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தனது எம்.பி பதவியை இராஜினாமா செய்துக்கொண்டதையடுத்து அவருடைய வெற்றிடத்திற்கு நளின் பிரியந்த பண்டாரவை நியமிக்கவிருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சி வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தயாசிறி ஜயசேகரவிற்கு அடுத்ததாக ஐக்கிய தேசியப்பட்டியலில் போட்டியிட்ட நளின் பிரியந்த பண்டாரவே 29,669 விருப்பு வாக்குகளைப்பெற்றுள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தயாசிறி ஜயசேகர ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 949 வாக்குகளை பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .