2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தெரணியகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெரணியலை பொலிஸ் நிலையத்திற்கு பொறுப்பதிகாரியாக அண்மையில் நியமிக்கப்பட்ட பிரபாத் தேசபந்து திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிரடிப்படையைச்சேர்ந்த முன்னாள் அதிகாரியான இவர், 19 தினங்களுக்கு முன்புதாக் தெரணியகலவிற்கு இடமாற்றம் செய்யப்பட்டிருந்தார். அதனை தொடர்ந்து அங்கிருந்த வன்முறை கும்பலை கைது செய்யும் நடவடிக்கைகளில் அவர் ஈடுபட்டிருந்தார்.

தெரணியகலை பிரதேச சபையின் முன்னாள் தலைவரான அனில் சம்பிக்கவின் சகோதரியை நூரி தேயிலை தோட்டத்தில் இடம்பெற்ற கொள்ளைச்சம்பவத்துடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்தார்.

மேலும், தற்போதைய பிரதேச சபையின் தலைவரான அநுர விஜேசூரிய நடத்திவந்த மதுபானசாலை உத்தியோகபூர்வா அனுமதி இல்லாமல் நடத்தியதற்காக அதனை மூடும்படி உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையிலேயே அவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .