2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

வெலிவேரியவில் உயிரிழந்தோர் மூன்றாக அதிகரிப்பு

Super User   / 2013 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சுத்தமான தண்ணீர் வழங்குமாறு கோரி கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது பொதுமக்களுக்கும் இராணுவத்திற்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது.

இதன்போது காயமடைந்த 19 மற்றும் 17 வயதான இருவர் உயிரிழந்தனர். இந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த மற்றுமொருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .