2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு; தமிழக அரசின் வழக்கு தள்ளுபடி

Kanagaraj   / 2013 டிசெம்பர் 06 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை திறப்பதற்கு அனுமதியளித்தமையை எதிர்த்து தமிழக அரசினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நினைவு முற்றத்தை திறக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அனுமதி தந்ததற்கு எதிராகவே தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்வு முடிந்ததையடுத்து இந்த மனு விசாரணைக்கு ஏற்கதக்கதல்ல என்று கூறியே வழக்கை தள்ளுபடி செய்தது என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .