2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

தென் மாகாணம் ஐ.ம.சு.மு. வசமானது

Menaka Mookandi   / 2014 மார்ச் 30 , மு.ப. 05:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென் மாகாணசபைத் தேர்தலின் இறுதி  முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தென் மாகாணசபையைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக 699,408 வாக்குகளைப் பெற்று தென் மாகாணத்தில் 31 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஐக்கிய தேசிய கட்சி மொத்தமாக 310,431 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களையும் மக்கள் விடுதலை முன்னணி 109,024 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களையும் கைப்பற்றியுள்ளது.

முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சி 75,532 வாக்குகளை மொத்தமாகப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X