2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

பிரான்ஸ் பெண்கள் இருவரை நாடுகடத்த உத்தரவு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 04 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்த பெருமானின் உருவத்தினை உடலில் பச்சை குத்திக் கொண்டு நாட்டுக்குள் பிரவேசித்த பிரான்ஸ் நாட்டு பெண்கள் இருவரை நாடுகடத்துமாறு நீர்கொழும்பு மாவட்ட நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அந்த பெண்கள் இருவரையும் நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(03) ஆஜர் படுத்திய போது நீதவான் இவ் உத்தரவை பிறப்பித்தார்.

மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த பெண்கள் விமான நிலையத்தில் வந்திறங்கிய போது விமான நிலைய பொலிஸாரால் இவ்விருவரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இலங்கைக்கு சுற்றுலா விசாவில் இந்த பெண்கள் வருகை தந்திருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X