2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பிள்ளைகளை கங்கைக்குள் வீசிய தந்தைக்கு வலைவீச்சு

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது இரண்டு பிள்ளைகளையும் நில்வலா கங்கையில் இன்று (24) முற்பகல் 11 மணியளவில் வீசிவிட்டு தலைமறைவாகியுள்ள தந்தையை தேடி வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை - மகாநாம பாலத்திற்கு அருகில் வைத்தே தனது 4 வயது பெண் பிள்ளையையும் 2 வயது ஆண் பிள்ளையையும் கங்கைக்குள் வீசியுள்ளார்.

சம்பவத்தையடுத்து விரைந்து செயற்பட்ட கெமுனு படைப்பிரிவைச்சேர்ந்த வீரர்கள் பிள்ளைகள் இருவரையும் மீட்டு மாத்தறை வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .