2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

விசேட பிரிவு திங்கள் திறக்கப்படும்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 24 , பி.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்காக நியமிக்கப்படவிருக்கின்ற விசேட பொலிஸ் பிரிவு கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135 இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5 ஆவது மாடியில் எதிர்வரும் திங்கட்கிழமை (28) திறக்கப்படும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி அஜித் ரோஹன தெரிவித்தார்.

பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த பிரிவில் உதவி பொலிஸ் அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X