2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

விமல் ஞாயிறன்று அறிவிப்பு?

Kanagaraj   / 2014 ஜூலை 04 , பி.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா அல்லது இல்லையா என்பது தொடர்பில் நிர்மாண மற்றும் பொறியியல்துறை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி ஞாயிறன்று அறிவிக்கவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தேசிய சுத்திர முன்னணி முன்வைத்துள்ள 12 அம்ச கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காததையடுத்தே முன்னணிக்கு முக்கிய தீர்மானமொன்றை எடுக்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

தமது நிலைபாடு தொடர்பில் ஞாயிறன்று விசேட ஊடகவியலாளர் மாநாட்டை நடத்தி அறிவிப்பதற்கு முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .