2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

முன்னாள் போராளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்கும் பொலிஸார்

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 16 , மு.ப. 08:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகளுக்கு பொலிஸாரால் தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பூஸா தடுப்பு முகாமில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளிகளில் 10பேருக்கு முதற்கட்டமாக காலியிலுள்ள தொழிற்பயிற்சி மத்திய நிலையத்தில் இந்த பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

பாரவூர்தி மற்றும் பெக்கோ லோடர், ஸ்கவேட்டர் உள்ளிட்ட வாகனங்களை செலுத்துதல் உள்ளிட்ட ஒரு மாத கால பயிற்சிகளே இதன்போது வழங்கப்பட்டுள்ளன.

இவ்வாறு பயிற்சியளிக்கப்பட்டவர்கள், கடந்த 13ஆம் திகதியுடன், தங்களது ஒரு மாத கால பயிற்சியை நிறைவு செய்துகொண்டுள்ளனர்.

தொடர்ந்து புனர்வாழ்வளிக்கப்பட்டவர்களுக்கு இவ்வாறான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .