2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

உயர்நீதிமன்றை நாட அரசாங்கம் முஸ்தீபு?

Thipaan   / 2014 ஒக்டோபர் 19 , பி.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜனாதிபதி தேர்தலில் போது மூன்றாவது தடவையாகவும் போட்டியிடமுடியுமா என்பது தொடர்பிலான சட்டப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அரசாங்கம், உயர் நீதிமன்றத்தை வியாக்கியானத்தை கோரவிருப்பதாக அரசாங்கத்தின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

18ஆவது திருத்தத்தின் வியாக்கியானத்தை ஜனாதிபதி காரியாலயத்தின் ஊடாக நீதிமன்றிடம் நவம்பர் முதல் வாரத்தில் கோரவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலும் 2015ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தை நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி சமர்ப்பித்ததன் பின்னர், அரசாங்கம் இதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தும் என்றும் தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 18ஆவது  திருத்தத்தில் இருக்கின்ற உறுப்புரைகளுக்கு அமைய ஜனாதிபதிக்கு மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடமுடியாது என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா உள்ளிட்ட சட்ட நிபுணர்களும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் பலரும் தர்க்கித்துவருகின்றனர்.

இதனால் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு  உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும் என்று அரசாங்கத்தின் சட்ட ஆலோசகர்கள் வழங்கிய அறிவுறுத்தல்களுக்கு அமையவே அரசாங்கம் நீதிமன்றத்தை நாடவிருப்பதாக தெரியவருகின்றது.

அரசியலமைப்புக்கு வியாக்கியானம் செய்யும் அதிகாரம் உயர்நீதிமன்றத்துக்கே இருக்கின்றது. இந்நிலையிலேய தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு 18ஆவது திருத்தம் தொடர்பிலான வியாக்கியானத்தை அரசாங்கம் கோரவிருக்கின்றது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .