2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

காணாமல் போன குழந்தை சடலமாக மீட்பு

Kanagaraj   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹொரணை, அங்குருவாதொட, வேரவத்தையில் நேற்று செவ்வாய்க்கிழமை 3ஆம் திகதி காணாமல் போன ஒருவயது 9 மாதங்களேயான குழந்தை,  இன்று புதன்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


களுகங்கையில் இருந்தே அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அக்குழந்தை கங்கையில் விழுந்து மரணமடைந்திருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்தனர்.


குழந்தைக்கு நேற்று பகல் சோறூட்டிய தாய், கையை கழுவுவதற்காக வீட்டுக்குள் சென்றபோது அச்சிறுமி காணாமல் போய்விட்டார் என்று பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .