2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அரசியல்வாதிகளின் பாதாள நண்பர்களுக்கு வலைவீச்சு

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் சிலர், தங்களது தேர்தல் நடவடிக்கைகளுக்கு பாதாள உலகக் கோஷ்டியினரின் உதவியை நாடியுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்கள் குறித்து பொலிஸ் தரப்பு விசேட தேடுதல் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது. 

இந்த பாதாள உலகக் கோஷ்டிக்குள் பிரபலம் பெற்ற நூற்றுக்கும் அதிகமாக ஆயுததாரிகள் உள்ளடங்குவதாகவும் கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற பாரிய குற்றங்களுடன் தொடர்புபட்டு, பின்னர் நாட்டைவிட்டு தப்பிச் சென்று மீண்டும் நாடு திரும்பிய 12பேரும் அடங்குவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

பிரதான கட்சிகளின் முக்கிய அரசியல்வாதிகளால் இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அவர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிக்க வாய்ப்புள்ளதால் அவர்களைக் கைது செய்வதற்காக கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .