2024 ஏப்ரல் 23, செவ்வாய்க்கிழமை

வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுக்க முடிவு

Kanagaraj   / 2015 ஓகஸ்ட் 04 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

2012ஆம் ஆண்டு மர்மமாக முறையில் மரணமான பிரபல்யமான றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது என்று தெஹிவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நீதிமன்ற விசேட வைத்திய குழு முன்னிலையிலேயே அவரது ஜனாஸா தோண்டியெடுக்கப்படவுள்ளது.

பாதுகாப்பு காரணங்களை கவனத்தில் கொண்டு, ஜனாஸாவை தோண்டியெடுக்கும் திகதி மற்றும் நேரத்தை குறிப்பிடமுடியாது என்று இந்த விவகாரம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கும் பாதுகாப்பு பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

பற்கள் உடைக்கப்பட்டு மற்றும் கைக்கால்கள் முறிக்கப்பட்ட நிலையில் படுகொலை செய்யப்பட்ட றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜூதீனின் ஜனாஸாவை தோண்டியெடுத்தல் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை இரகசிய பொலிஸார் கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X