2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

தேர்தலின் பின் தேசிய அரசாங்கம்: ரணில் பிரதமர்; மஹிந்த எம்.பி

Gavitha   / 2015 ஓகஸ்ட் 05 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் 17ஆம் திங்கட்கிழமை நடைபெறவிருக்கின்ற பொதுத்தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் என்று பிரபல சோதிடர் உபுல் எஸ் தொம்பேபொல தெரிவித்துள்ளார்.

தேர்தலின் பின்னரும் தேசிய அரசாங்கமே அமைக்கப்படும் அந்த தேசிய அரசாங்கத்தின் முதலாவது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆவார். இந்த நாடாளுமன்ற பதவிக்காலத்தின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு புதிய தலைவர் உருவாகுவார்.

இந்த தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாலும் அவர், சாதாரண எம்.பியாவேனும் செயற்படமாட்டார் என்றும் அவர் கணித்துள்ளார்.

இதேவேளை, சிறிய கட்சிகளிலில் இருந்து தேசிய தலைவர் உருவாகுவார் என்றும் அரசியலமைப்பின் 20ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் அவர் கணித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .