2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

'ஒபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது'

George   / 2015 ஓகஸ்ட் 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

“பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டொனி பிளேயர் வந்திருக்கின்றார். விடுமுறையை கழிப்பதற்காக வந்திருந்தால், நுவரெலியாவுக்கு போகலாம், கடற்கரைக்கு போகலாம் ஆனால், யாழ்ப்பாணத்துக்கு ஏன் போகவேண்டும்” என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, குருநாகலில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இறுதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் கேள்வி எழுப்பினார்.

“அவர், யாழ்ப்பாணத்துக்கு சென்றிருக்கின்றார். புதைக்கப்பட்டுள்ள புலிகளை உசுப்புவதற்கே அவர் யாழ்ப்பாணத்துக்கு சென்றுள்ளார். டொனி பிளேயர் அல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஓபாமா வந்தாலும் ரணிலை காப்பாற்ற முடியாது” என்று விமல் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .