2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

தனியார் பஸ் விபத்தில் 16 பேர் காயம்

Princiya Dixci   / 2015 ஓகஸ்ட் 16 , மு.ப. 10:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்காலை – திஸ்ஸ பிரதான வீதியில் தங்காலை, மாரக்கொல்லிய பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற வாகன விபத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர்.

மாத்தறையிலிருந்து திஸ்ஸ நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும் எம்பிலிபிட்டியவிலிருந்து மாத்தறை நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியே விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் மாத்தறையிலிருந்து திஸ்ஸ நோக்கி சென்ற தனியார் பஸ்ஸின் பின்பகுதியில் லொறியொன்றும் மோதியதாக தங்காலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பெண்ணொருவரின் நிலைய கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல் தெரிவித்தன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .