2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

ஐ.தே.க, சு.க.வுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Kogilavani   / 2015 ஓகஸ்ட் 21 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கருத்தொற்றுமையை கட்டியெழுப்புவதற்கு கைக்கோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க விடுத்த அழைப்புக்கு அமைய, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாத்திடப்பட்டது.

நாட்டின் 19ஆவது பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்கும்  வைபவத்தை அடுத்தே இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த வைபவத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் கபீர் ஹாசீம் மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பதில் செயலாளர் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .