2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

203 பேரை இயற்கை அனர்த்தம் காவு கொண்டது

Editorial   / 2017 ஜூன் 01 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயற்கை அனர்த்தங்களினால், மரணமடைந்தோர் எண்ணிக்கை நேற்றுடன் (31) 203 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை, மொத்தமான 6 இலட்சத்து 31 ஆயிரத்து 346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.  

இதேவேளை, காணாமற் போனோரின் எண்ணிக்கை 92 ஆகும். 63 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது. 

15 மாவட்டங்களில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக, 164,264 குடும்பங்களைச் சேர்ந்த 631,346 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் 368 மத்திய முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவற்றில், 19,876 குடும்பங்களைச் சேர்ந்த 77,643 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்நிலையம் அறிவித்துள்ளது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .