2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

கண்டியில் 23 பேக்கரி உரிமையாளர்கள் கைது

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி மாவட்டத்திலுள்ள 23பேக்கரி உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. அளவை, நிறுவைகளில் காணப்பட்ட குறைபாடுகளை அடுத்தே இந்த வழக்கு தொடரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

கண்டி மாவட்ட செயலாளர் கோட்டாபய ஜயரட்னவின் வேண்டுகோளின் பிரகாரம் கண்டி அளவை, நிறுவை திணைக்கள அதிகாரிகளினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கட்டுகள்தோட்டை, ஹேதெனிய, கலகெதர, கம்பளை, முருதலாவ, அம்பிட்டிய போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .