2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

இடமாற்றம் 24 மணிநேரத்துக்குள் இரத்து

Kanagaraj   / 2012 நவம்பர் 14 , மு.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரஞ்ஜன் அபேவர்தனவின் இடமாற்றம் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கஹவத்தை படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திவரும் நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு திடீர் இடமாற்றம் நேற்று வழங்கப்பட்டது.

இதற்கமைய கஹவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிரஞ்ஜன் அபேவர்தன பொலிஸ் தலைமையகத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். அவரது இடமாற்றமே 24 மணிநேரத்துக்குள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை கஹவத்தை  யில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்திவந்த பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை எதிர்த்து கஹவத்தையில் நேற்று கறுப்பு கொடிகள் தொங்கவிடப்பட்டு  கடையடைப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X