2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

வெள்ளைக்கொடி வழக்கில் பொன்சேகா குற்றவாளி ; 3 வருட சிறை, அபராதம்

Super User   / 2011 நவம்பர் 18 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.பாருக் தாஜுதீன்)

வெள்ளைக்கொடி வழக்கில் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா குற்றவாளி என கொழும்புமேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

இதனால் அவருக்கு மூன்று வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பொன்சேகாவுக்கு 5000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அபராத தொகையை செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெள்ளைக்கொடியுடன் சரணடையும் எல்.ரி.ரி.ஈ. தலைவரகளை சுடுமாறு பிரிகேடியர் சவேந்திர சில்வாவுக்கு பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டதாக சண்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் பிரெட்ரிகா ஜேன்ஸுக்கு தெரிவித்ததாக இவ்வழக்கில் சரத் பொன்சேகா மீது குற்றம் சுமத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

*வெள்ளைக்கொடி வழக்கு தீர்ப்பையடுத்து அமைதியை குழப்ப எவரும் முற்பட்டால் அதிகாரத்தை பயன்படுத்த பொலிஸாருக்கு உத்தரவு

*வெள்ளைக்கொடி வழக்கின் தீர்ப்பு இன்று


You May Also Like

  Comments - 0

  • pasha Friday, 18 November 2011 08:41 PM

    எதிர்பார்த்தது தான்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .