2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

ரூ. 30 இலட்சம் வங்கி கொள்ளை விவகாரம்; சந்தேக நபர் கைது

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 10 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்குச் சொந்தமான 30 இலட்சம் ரூபாவை சுமார் 20 நாட்களுக்கு முன்னர் கொள்ளையிட்ட நபரை களுவாஞ்சிக்குடி பொலிஸாருடன் இணைந்து விஷேட அதிரடிப் படையினர் நேற்று கைது செய்துள்ளனர்.

நாவற்காடு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து பணம், தங்க நகை, மோட்டார் சைக்கிள் உட்பட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பி. ஆர். மானவடு தெரிவித்தார்.

கடந்த மாதம் 15ஆம் திகதி களுவாஞ்சிக்குடி தேசிய சேமிப்பு வங்கிக்கு சொந்தமான 30 இலட்சம் ரூபா பணத்தை மற்றொரு வங்கியிலிருந்து எடுத்து வரும்போது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் கொள்ளையிட்டுச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .