2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

பேருவளை முஸ்தபவிய்யா தரீக்காவின் 131ஆவது வருடாந்த கந்தூரி வைபவம்

Menaka Mookandi   / 2010 ஜூலை 11 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்புமிக்க பேருவளை, மாளிகாச்சேனையிலுள்ள பைதுல் முபாரக் முஸ்தபவிய்யா புகாரி தரீக்காவின் 131ஆவது வருடாந்த புகாரி கந்தூரி தமாம் வைபவம் நாளை மறுதினம் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

மேற்படி மஜ்லிஸ் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி அதிகாலை ஸூபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்டு, 30 நாட்கள் தொடர்ந்து நடபெற்ற நிலையில் இம்மாதம் 13ஆம் திகதியுடன் நிறைவு பெறுகின்றது.

இதனை, கத்ரியதுன் நபவிய்யா தரிக்காவின் ஆன்மிக்த் தலைவர் சங்கைக்குரிய அஷ்ஷக் அஹ்மத் இப்னு முஹம்மத் நாயகம் தலைமை தாங்கி நடத்தி வைக்கவுள்ளார்.

இந்நிகழ்வில், நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும் ஒரு இலட்சத்துக்கும் அதிகமானோர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.  

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .