2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

காலி துப்பாக்கிப் பிரயோகம்: 5 பொலிஸ் குழுக்கள் நியமனம்

Super User   / 2011 மார்ச் 05 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ்)

காலி ரத்மகமையில் நேற்று ஐ.ம.சு.மு. ஆதரவாளர்கள் இருவரை சுட்டுக்கொன்ற இரு சந்பேதக நபர்களை கைது செய்வதற்கு 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தென்பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபர் கிங்ஸ்லி ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

பலியானவர்கள் மீது பிரேத பரிசோதனைகள் இன்று நடைபெறவுள்ளன. இந்நிலையில் கராபிட்டிய வைததியசாலைக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.

மேற்படி துப்பாக்கிப் பிரயோக சம்பவத்தில் வேட்பாளர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்ருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்  துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .