2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

50 அடி பள்ளத்தில் விழுந்து லொறி விபத்து

Editorial   / 2019 நவம்பர் 24 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலாங்கொடையிலிருந்து நோர்வூட்  பகுதிக்கு மரக்கறி ஏற்றிவந்த லொறியொன்று 50 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர் 

ஹட்டன் - பொகவந்தலாவை பிரதான வீதியின்  செப்பல்டன் பகுதியில் இன்று (24) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது

சாரதியின் கட்டுப்பாடை மீறிய நிலையில், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதுடன், லொறியில்  காணப்பட்ட மரக்கறிகள்சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .