2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 51 மில்லியன் டொலர் நிதி தேவை: ஐ. நா.

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 19 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட ஒரு மில்லியன் மக்களுக்கு உடனடி உதவிகளை வழங்குவதற்காக 51 மில்லியன் டொலர் நிதி தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது.  

3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவசரகால நிவாரண பிரதி இணைப்பாளர் கதரின் பிராக், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.

வெள்ளத்தினால் 43 பொதுமக்கள் பலியாகியுள்ளதுடன், 4 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. வெள்ளநீர் வற்றிச் செல்கின்ற  நிலையில் அரசாங்கத்தின் நலன்புரி நிலையங்களில்; 10,000க்கும் குறைவான பொதுமக்கள்; தங்கியுள்ளனர்.

அரசாங்கத்தின் உயர் அதிகாரிகளை சந்தித்த பின்னர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கதரின் பிராக் திரும்பிச்செல்லவுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .