2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’அரசாங்கம் பிக்குகளை முடக்குகின்றது’

R.Maheshwary   / 2020 நவம்பர் 24 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கம் சரியான வழியில் பயணிப்பதற்கு வழிகாட்டும் மற்றும் பிழையானதை சுட்டிக்காட்டும் பிக்குகளையும் பல்வேறு தேசிய அமைப்புகளையும் முடக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றமை பாரிய குற்றமென, சிங்கள ராவய அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அக்மீமன தயாரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

தெஹிவளை பௌத்த மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப ஆலோசனை வழங்கிய, ஆலோசனை சபையை எம்மால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் அழிப்பதற்கு ஆலோசனை வழங்குகின்றதா என்ற சந்தேகம் தமக்கு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X