2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அரச கரும மொழிகள் ​​ஆணைக்குழுவுக்கான தலைவர் தெரிவு

Editorial   / 2018 ஏப்ரல் 12 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேராசிரியர் சோமசுந்தரம் சந்திரசேகரத்தை அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவராக, நியமிப்பதை எண்ணி மகிழ்வடைவதாக அமைச்சர் ​மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வியியல்துறையில் பேராதனை பல்கலைக்கழக, ஹிரோஷிமா பல்கலைக்கழக முதுமானி பட்டதாரியும், கொழும்பு பல்கலைக்கழக கல்வியியல்துறை முன்னாள் பீடாதிபதி, தேசிய கல்வி ஆணைக்குழுவின் முன்னாள் அங்கத்தவரும், முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதிய, மற்றும்  கொழும்பு தமிழ் சங்கத்தின் முன்னாள் தலைவரும்  தமிழ், ஆங்கில, சிங்கள மொழி புலமைகள் கொண்டவருமான, பேராசிரியர் சோமசுந்தரத்தை, 1991 ஆம் ஆண்டு 18 ஆம் இலக்கச் சட்டத்தின் கீழ், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவுக்கு, முதன்முதலாக தமிழர் ஒருவரை நியமித்துள்ளதையிட்டு, பெருமகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் மனோ கணேசன் கருத்து வெளியிட்டுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .