2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

அலோஸியஸின் உதவியாளர் வைத்தியசாலையில்

Editorial   / 2017 ஒக்டோபர் 13 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஷெஹான் சாமிக்க சில்வா

பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோஸியஸின் தனிப்பட்ட உதவியாளர் ஸ்டீவ் சாமுவேல், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார் எனவும், மிக அண்மைய காலத்தில், அவரால் சாட்சியமளிக்க முடியாது எனவும், பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு, நேற்று அறிவிக்கப்பட்டது. சாமுவேலின் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணி ஜீவந்த ஜயதிலக்க, இதை ஆணைக்குழுவுக்கு அறிவித்தார்.

இருதய நோய் சம்பந்தமாக, தனது சேவை பெறுநர் சிகிச்சை பெற்று வருகிறார் எனத் தெரிவித்த சட்டத்தரணி, அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதன் காரணமாக, அவரை இதுவரை சந்திக்க முடியவில்லை என்றும் தெரிவித்தார்.  இதன்காரணமாக, ஆணைக்குழுவால் மேலதிக நேரம் வழங்கப்பட வேண்டுமென, அவர் கோரிநின்றார்.

சாட்சியின் மருத்துவ அறிக்கைகளைப் பெற்றுள்ளதாக, ஆணைக்குழு நேற்று உறுதியளித்தது. அதைத் தொடர்ந்து, சாட்சியமளிப்பதற்கு அவர் எப்போது தயாராக இருப்பார் என்ற விடயத்தை வெளிப்படுத்துமாறு, அவரின் சட்டத்தரணிக்கு, ஆணைக்குழு உத்தரவிட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .