2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

அவன்கார்ட் கப்பலின் பொறுப்பாளர், முகாமையாளரின் விளக்கமறியல் நீடிப்பு

ஆர்.மகேஸ்வரி   / 2018 மே 17 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவன்கார்ட் கப்பலில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியசாலையை நடத்திச் சென்றமைத் தொடர்பில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த களஞ்சியசாலையின் பொறுப்பாளர் மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் இருவரையும், எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் ஏ. நிசாந்த பீரிஸ் இன்று (17) உத்தரவிட்டுள்ளார்.

குறித்த களஞ்சியசாலையின் பொறுப்பாளரான
கேர்ணல் தொன் தோமஸ் எல்பட் விஜேதுங்க திலகரத்ன மற்றும் செயற்பாட்டு முகாமையாளர் மேஜர் மில்லனியகே சுமுது நிலுபுல் கொஸ்தா ஆகிய சந்தேகநபர்களது விளக்கமறியலே நீடிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .