Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 மார்ச் 28, வியாழக்கிழமை
Editorial / 2020 மார்ச் 25 , பி.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இத்தாலியின் மெசினோ நகரில் இலங்கையர் ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தமையை உறுதிப்படுத்த முடியவில்லை என ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயம் தெரிவித்துள்ளது.
இதேவேளை மெசினோ நகரில் வசித்த 70 வயதான இலங்கையர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிவரும் செய்திகளில் உண்மையில்லை என இலங்கையின் வெளி விவகார அமைச்சின் பேச்சாளரான ருவந்திகா தெல்பிட்டிய தெரிவித்துள்ளார்.
எந்தவொரு இலங்கையரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, உியிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
எனவே இந்த விடயம் தொடர்பில் சரியான தகவல்களை வெளிப்படுத்துமாறு அந்நாட்டு ஊடகங்களுக்கு அறிவிக்குமாறு, ரோமிலுள்ள இலங்கைத் தூதுவராலயத்துக்கு அறிவித்துள்ளதாக அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
5 hours ago
6 hours ago