2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

இலங்கை அகதிகள் துருக்கியில் கைது

Editorial   / 2018 மே 17 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையர் உள்ளிட்ட 476 சட்டவிரோத குடியேற்றவாசிகள், துருக்கியில் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக துருக்கி செய்த இணையதளமான நியுஸ் ஒன் டர்கி (news on turkey) செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்றைய தினம் துருக்கிய கடக்க முற்பட்ட சுமார், 476 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளில் இலங்கையரும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.

துருக்கி நாட்டின் கிழக்கு எலாசிக் (Elazig) மாகாண எல்லையில் புதிய மனிதர்கள் சிலர் நடமாடுவதாகக் கிடைத்த தகவலுக்கு அமைய, எலாசிக் - பிங்கோல் (Bingol) பிரதான வீதியில் பஸ்ஸில் பயணித்த 22 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இவர்கள் ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்கள் எனத்  தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .