2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இலங்கை வரவுள்ள பேஸ்புக் நிறுவன அதிகாரிகள்

ஆர்.மகேஸ்வரி   / 2018 மார்ச் 14 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேஸ்புக் வலைத்தளத்தை தற்காலிகமாக இடைநிறுத்தியமைத் தொடர்பில், கலந்துரையாடலை மேற்கொள்வதற்காக, பேஸ்புக் நிறுவனத்தின் அதிகாரிகள் மூவர் இன்று இலங்கைக்கு வரவுள்ளனர்.

இவர்கள் நாளைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணான்டோ ஆகியோரை சந்திக்கவுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

குறித்த குழுவினருடன் மேற்கொள்ளப்படும் கலந்துரையாடலையடுத்து, பெரும்பாலும் நாளை மறுதினம் பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் தடைகள் நீக்கப்படலாம் என தொலைத்தொடர்பு மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .