2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஊழியருக்கு கொரோனா; தபால் அலுவலகத்துக்கு பூட்டு

J.A. George   / 2021 ஜனவரி 21 , பி.ப. 12:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெஹிவளை தபால் அலுவலக ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதியான நிலையில் இன்று(21) முதல் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.

கரந்தெனிய பகுதியை சேர்ந்த குறித்த பெண் ஊழியர்கள் இறுதியாக கடந்த திங்கட்கிழமை சேவைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அதனையடுத்து, அவர் சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் அவர் கடமையாற்றி தபால் அலுவலகம் தற்காலிகமாக பூட்டப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .