2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

’என்னை பழிவாங்கவே அதிகாரிகளை துன்புறுத்துகிறார்கள்’

Editorial   / 2017 நவம்பர் 14 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அரசாங்கத்தில் சேவையாற்றிய அதிகாரிகளை தொந்தரவு செய்து, தன்னை தற்போதைய அரசாங்கம் பழிதீர்ப்பதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்தொகுதி பிரதானியாக பணியாற்றிய காமினி செனரத்தை சந்திப்பதற்காக, வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று  (14) விஜயம் மேற்கொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கப் பணத்தில் 4 பில்லியன் ரூபாயைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில், காமினி செனரத் உள்ளிட்ட மூவர், நேற்று  (13) நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இதன்பின்னர், அவர்களை, எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .