2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

எரிபொருட்களின் விலை மீண்டும் அதிகரிப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

எரிபொருட்களுக்கான விலை சூத்திரத்தின் அடிப்படையில், எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளனவென, நிதியமைச்சு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 2 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் லீற்றர் ஒன்றின் விலை ஒரு ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதே​வேளை, ஜூலை மாதம் 10 ஆம் திகதியன்று மேற்கொள்ளப்பட்ட விலை சூத்திரத்தின் பிரகாரம், 92 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 8 ரூபாவினாலும், 95 ஒக்டென் பெற்றோல் லீற்றரின் விலை 87 ரூபாவினாலும், ஒரு லீற்றர் டீசலின் விலை 9 ரூபாவினாலும், ஒரு லீற்றர் சுப்பர் டீசலின் விலை 10 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிட்டத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .