2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படமாட்டாது

Nirshan Ramanujam   / 2017 செப்டெம்பர் 13 , பி.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்கும் எண்ணம் தற்போதைக்கு அரசாங்கத்துக்குக் கிடையாது என அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளர்களில் ஒருவருமான ராஜித சேனாரத்ன இன்று (13) தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

"எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் சமையல் எரிவாயுவின் விலையை 8 தடவைகள் குறைத்திருக்கிறோம். இந்நிலையில் எரிவாயுவின் விலையை 10 வீதத்தால் அதிகரிப்பதற்கான கோரிக்கையை நிறுவனத்தினர் முன்வைத்தார்கள். எனினும் இது தொடர்பில் அடுத்த வருடம் தீர்மானிக்கலாம் என அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டது" என அவர் மேலும் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .