2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

ஐஃபா சர்வதேச இந்திய திரைப்பட விழா; தென்னிந்திய நடிகர் இலங்கை வருகை

Super User   / 2010 ஜூன் 01 , மு.ப. 11:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐஃபா சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவில் கலந்துகொள்ளும் முகமாக, தென்னிந்திய நடிகர்கள் சிலர் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர்.

தென்னிந்திய நடிகர்களான விவேக் ஒவ்ரோய், வுமன் ஈரானி, லாரா தத்தா,  ரிடெஷ் தேஷ்முகி ஆகியோரே இலங்கையை வந்தடைந்திருப்பதாக இலங்கை சுற்றுலாச்சபை தெரிவித்தது.  இவர்களில் வுமன் ஈரானி, லாரா தத்தா,  ரிடெஷ் தேஷ்முகி ஆகியோர் எதிர்வரும் 5ஆம் திகதி சுகததாச உள்ளக அரங்கில் நடைபெறவிருக்கும் நிகழ்வில் பிரதம அதிதிகளாக கலந்துகொள்ளவிருப்பதாகவும் அந்த சபை குறிப்பிட்டது.

இது தவிர, பல தென்னிந்திய நடிகர்கள் மற்றும் இசை வல்லுனர்கள் நாளை இலங்கையை வந்தடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் இலங்கை சுற்றுலாச்சபை குறிப்பிட்டது.

எனினும், இவ்விழாவில் நடிகர்களான ஷாருக்கான்,அர்ஜுன் ராம்பால்,அபிஷேக்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோர் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று தெரியவருகிறது.





You May Also Like

  Comments - 0

  • Boss1319 Tuesday, 01 June 2010 11:02 PM

    மேற்படி விழாவினை மிக வெற்றிகரமாக நடாத்திக்காட்ட வேண்டும். இதன் மூலம் இந்த விழாவினை தடுப்பதற்கு முயற்சித்த விசமிகளுக்கு சரியான பாடமாக அமையும்.

    Reply : 0       0

    koneswaransaro Wednesday, 02 June 2010 03:43 AM

    ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை.

    Reply : 0       0

    xlntgson Thursday, 03 June 2010 09:00 PM

    தென்னிந்தியதிரைப்பட ஒற்றுமைக்கு குந்தகம்இல்லாமல் எல்லாரும் புறக்கணித்துவிட்டனர் என்று தெரிகிறது! இதில் எல்லாம் அரசியல் என்னத்துக்கு என்று தெரியவில்லை, இம்மாதிரியான எதிர்ப்புகளில் எதை சாதிக்க முடியும்? கலை உலகம் அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும் காலம் ஒன்றை கற்பனைசெய்து பார்க்கின்றேன் முற்காலத்தில் அவ்வாறு இருந்திருக்கிறது, சுதந்திரத்துக்கு முன்பு!

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .