Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை
Editorial / 2018 ஜூன் 14 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
யூரோ-4 எரிபொருள் அறிமுகத்தால் இலங்கை எரிபொருள் சந்தையில் இருந்து ஒக்டேன் 92 பெற்றோல் மற்றும் ஒடோ டீசல் என்பன நீக்கப்படமாட்டாது என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் உபாலி மாரசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
"யூரோ-4 எரிபொருள் அடுத்த மாதம் முதல் சந்தையில் விற்பனைக்கு வருகின்ற வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. யூரோ-4 தரத்திற்கான ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவை அறிமுகப்படுத்தப்படும்."எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"இதனால் தற்போது உள்ள ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படாது. அதேவேளை அறிமுகப்படுத்தப்படவுள்ள யூரோ ஒக்டேன் 95 பெற்றோல் மற்றும் சுபர் டீசல் என்பவற்றின் விலையானது தற்போதைய விலையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது." எனவும் அவர் வலியுறுத்தினார்.
"யூரோ-4 என்றது ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட எரிபொருள் தரமாகும். இந்த தரத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் எரிபொருளானது சுற்றாடலுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது. மேலும் வாகனங்களின் தரத்தையும் உறுதிப்படுத்தும். பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சு என்பவை இணைந்தே இந்த புதிய தரத்திலான எரிபொருளை அடுத்தமாதம் இலங்கைக்கு அறிமுகப்படுத்தவுள்ளது." எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
"யூரோ-4 அறிமுகமானதும் சாதாரண தரத்திலான பெற்றோல் ஒக்டேன் 95 மற்றும் சுபர் டீசல் ஆகியன சந்தையில் இருந்து நீங்க வழிவகுக்கும். ஆனால் எரிபொருள் சந்தையில் பெற்றோல் ஒக்டேன் 92 மற்றும் ஒடோ டீசல் என்பவற்றுக்கு எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது." எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
7 hours ago