2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

‘ஒரு துருப்புச் சீட்டையே பயன்படுத்தியுள்ளேன்’

Editorial   / 2018 நவம்பர் 09 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் பயன்படுத்தியது ஒரு துருப்புச் சீட்​டாகும். தேவையேற்படின், பயன்படுத்துவதற்கு இன்னும் பல துருப்புச் சீட்டுகள் என்னிடம் உள்ளன எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தான் எடுத்த தீர்மானத்தை எக்காரணம் கொண்டும் மீளப்பெற்றுக்கொள்ளமாட்​டேன் என்றும் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அரசாங்கத்தின் வேலைத்திட்டத்துக்கு எதிர்வரும் 14 ஆம் திகதியன்று நாடாளுமன்றத்தில் ஒத்துழைப்பு நல்குமாறு, ஐக்கிய தேசியக் கட்சிக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி, அவ்வாறு இல்லாவிடின் அரசமைப்பின் பிரகாரம், சட்டரீதியான முன்னெடுக்கக்கூடிய துருப்புச் சீட்டு தன்னிடம் இருக்கிறது என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X