2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து அலைபேசி மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 02 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூஸா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள, பாதாளக்குழுவொன்றின்  உறுப்பினரான, கஞ்சிபான இம்ரானின் சிறைக் கூண்டிலிருந்து, இன்று (2)  அதிகாலை, அலைபேசியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் தலைமையகத்தின் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பின் போதே, இந்த அலைபேசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கஞ்சிபான இம்ரான் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக் கூண்டில் பாதுகாப்பு கமெரா ​ஒன்று பொருத்தப்பட்டுள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளின் ஒததுழைப்புடன் இந்த அலைபேசி  இம்ரானுக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என சந்​தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X