2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

கண்டி அசம்பாவிதங்கள்: நட்டஈட்டின் முற்கொடுப்பனவு வழங்கப்பட்டது

Editorial   / 2018 மார்ச் 14 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த வாரம், கண்டியில் இடம்பெற்ற அசாதாரண நிலையின் போது, உயிரிழந்தவருக்காக வழங்கப்படவுள்ள நட்டஈட்டுத் தொகையின் முற்கொடுப்பனவாக 1 இலட்சம் ரூபாயும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும், உயிரிழந்தவரின் உறவினர்களிடம் நேற்று முன்தினம் (12) வழங்கப்பட்டுள்ளது.

புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சினால் இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், மிகுதி 4 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு, அமைச்சரவையின் அனுமதியைப் பெறுவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அசாதாரண நிலைமையின் போது, உயிரிழந்த நபருக்கு 5 இலட்ச ரூபாய் நட்டஈடும், இறுதிக் கிரியைகளுக்காக 15,000 ரூபாயும் வழங்குவதற்கு திட்டமிடப்படப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .