2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

களனியில் சிறுமி கடத்தல்;சந்தேக நபரை வைத்தியசாலையில் அனுமதிக்க உத்தரவு

Super User   / 2010 ஜூன் 07 , பி.ப. 12:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

களனிப் பிரதேசத்தில் சிறுமி ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த சந்தேக நபரை அங்கொடை மனநல வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொழும்பு மேலதிக நீதிவான் இன்று உத்தரவிட்டார்.

குறித்த சிறுமி சமய வழிபாடுகளில் ஈடுபடும் பொருட்டு,  களனியிலுள்ள கோவிலொன்றுக்கு தனது பெற்றோருடன் சென்றிந்தபோதே காணாமல் போனார்.

இந்நிலையில், குறித்த சிறுமி கடந்த மாதம் மாரவிலப் பகுதியில் வைத்து பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டிருந்த அதேவேளை,  குறித்த சிறுமியுடன் இருந்த சந்தேக நபரும்  கைது செய்யப்பட்டிருந்தார்.

மேற்படி சந்தேக நபரை எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிவான்  உத்தரவிட்டார்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .