2024 ஏப்ரல் 25, வியாழக்கிழமை

கொஸ்கமவில் தப்பியவர் பொரளையில் சிக்கினார்

A.Kanagaraj   / 2020 ஒக்டோபர் 23 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொஸ்கமவில் தப்பிய கொரோனா தொற்றாளர், பொரளை சஹஸ்ரபுரவிலுள்ள தொடர்மாடிக் குடியிருப்பில், 13ஆம் மாடியில் மறைந்திருந்த நிலையில் சிக்கிக்கொண்டார் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

கொஸ்கம பகுதியிலுள்ள கொரோனா தொற்றாளர்களுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 26 வயதான அந்த நபர், வைத்தியசாலையிலிருந்து இன்று (23) காலை 6 மணியளவிலேயே அவர் தப்பியோடிவிட்டார் ​என கொவிட்-19 பரவுதலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .