2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

காணாமல் போன மீனவர்களை தேடுவதற்கு விசேட சுழியோடிகள் குழு அனுப்பி வைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 13 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி கடற்பரப்பிலிருந்து, 30 கடல் மைல் தொலைவில் வைத்து கப்பலொன்றுடன் மோதி விபத்துக்குள்ளான மீனவப் படகிலிருந்து காணாமல் போன இரண்டு மீனவர்களைத் தேடும் பணியில் கடற்படையின் விசேட சுழியோடிகள் குழு ஒன்று அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் டோரா படகொன்று குறித்த கடற்பரப்பில் காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், குறித்த விபத்தை ஏற்படுத்திய கப்பல் எந்த நாட்டுக்குரியது என்பது குறித்து,  இதுவரை தகவல்கள் கிடைக்கவில்லையென்றும், கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கமான்டர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற இந்த விபத்தில், பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்ததுடன், இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .