2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

குருநாகல்- வேகட பாடசாலைக்குப் பூட்டு

S. Shivany   / 2020 நவம்பர் 24 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் மாவட்டத்தின், வென்னப்புவ கல்வி வலயத்துக்குட்பட்ட வேகட வித்தியாலயத்தை இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குருநாகல் பிரதான தபால் நிலையத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளருடன், மேற்படி பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவர் தொடர்புகளைக் கொண்டிருந்தமையால் இந்த  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆசிரியர் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதால், அறிக்கை கிடைக்கும் வரை பாடசாலையை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆசிரியர் நேற்று பாடசாலைக்குச் சென்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .