2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

குற்றத்தை ஒப்புக்கொண்ட சஜினுக்கு 1000 ரூபாய் அபராதம்

Editorial   / 2017 டிசெம்பர் 07 , பி.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவுக்கு  1000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு மேலதிக நீதவான்  அருணி ஆட்டிகல இன்று(7) இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 

 தனது சொத்துக்கள் தொடர்பான விபரங்களை வெளிப்படுத்த தவறிய குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டமையால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

சஜின் வாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்த 2011 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி தொடக்கம் 2012 மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தனது சொத்து விபரங்களை உரிய முறையில் வெளிப்படுத்தவில்லை எனத் தெரிவித்து இலஞ்ச ஒழிப்பு பிரிவால் இவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன்,1000 ரூபாய் அபராதத்தை செலுத்த தவறும் பட்சத்தில்ஒருவருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .