2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

கூரிய ஆயுதத்தால் தாக்கி பெண் கொலை

Editorial   / 2018 ஓகஸ்ட் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவை- சிறிமல்வத்தை பிரதேசத்தில் அமைந்துள்ள, 2 மாடி வீடொன்றில், 55 வயதுடைய பெண்ணொருவர், கூரிய ஆயுத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் இன்று (10), அதிகாலை இடம்பெற்றுள்ளதென, கொட்டாவைப் பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த பெண்ணின் மகளும் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மகள் வழங்கிய தகவலுக்கமைய, அவளுடைய காதலனான, தனியார் பல்கலைக்கழகமொன்றின் விரிவுரையாளரை கைது செய்ய, விசேட பொலிஸ் குழுவினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X